வியாழன், 30 ஜனவரி, 2014

முக நூல்

முக நூல்
 
எனது வன்மங்களை
பிரதியிடும் போது
சில
விளம்பர படுத்தலும் நிகழ்ந்து விடுகிறது
 
ஒவ்வொரு முகஙகளிலும் தேடுகிறேன் நல்லவைகள் ஒட்டியிருக்கின்றதாயென
வலைத்தளங்களின் வலைகளில்
இண்டு இடுக்கெல்லாம் ஒடுகிறது
எனது எலி மனம்
 
சில வேளைகளில் அங்கே கொட்டப்படும்
வன்மங்களின் குப்பைகளில் 
விசாரிப்புகளில்
விமர்சனங்களில்
புதைந்து சிதைந்தும் விடுகிறேன்
 
மனச்சிக்களின் கார்ணமாக அதன் நடுப்பக்கத்தில்
செருகப்பட்டுவிடுகிறேன்
 
சில சொடுக்குகளில் விபரீதம் நடத்துகிறேன்
சில இடுகைகளில் உற்சாகமடைகிறேன்
 
கருப்பு, சிகப்பு, வெள்ளை மஞ்சள்  நீலமென நிரம்பி வழிகிறது
என் முகமெங்கும்
 
எல்லோருடைய மனங்களில் எழும்
வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளும்
தொட்டியாய் இந்த முக நூல்.........
 
துவாரகா  சாமி நாதன்
9629272185