திங்கள், 28 ஜூலை, 2014

குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்


குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்


 நேற்று நண்பனுடன் உரையாடிய பின்னும்
கற்பமான மனைவியைக் கூட்டிக்கொண்டு
அவளின்  'கார்' வாங்கும் கனவுடன்
அங்கு சென்றேன்
காத்திருப்பு
அங்காலாய்ப்பு இடையிடையே
காதல் தகிப்பு
ஊடல் பகிர்வு
சிறு எரிச்சல்
அவளுக்கு வியர்த்தது
எனக்கும்
அவளுக்கு பதிலாக வரிசையில்
என்னை போலவே கனவுகளை முதுகில் சுமந்து கொண்டு
 நிறைய பேர்
வேண்டாம் என்று தோன்றும் போது
'கார்' கனவு விண்ணப்பம்
அவளின் கண்ணுக்குள் தெரியும்
 நண்பனின் அலைபேசி அழைப்பு ஊடறுக்கும்
இடையில் குறுக்கிட்டு
அலுவலக த் தொழிலாளி வேறு
'கார்டு' வந்ததா?
எல்லாம் சரியாக உள்ளதா? என்று கேட்டான்
முகவரி மாறியதை எழுததாற்கு
என் அலைச்சல்களின் கோப அம்புகளை
அவன் மீது பாய்ச்சினேன்
துடைத்துக் கொண்டே அவன் ஒரே பாட்டையே
திரும்பவும் பாடினான்
முக்கியமான 'தாள்' இருக்கா என்றான்
குறைவாக உள்ள்து என்றேன்
எல்லாம் சரியாகி உள்ளே போகும் முன்
 நண்பன் வேகமாக வந்து
விண்ணப்பத்தை கிழித்துப்போட்டு
மனைவியையும் இழுத்துக் கொண்டு சென்றான்
 நான் மட்டும்
வேகா தலையுடனும் சாகா காலுடனும்
கீழ் கொட்டிய மன அதிர்வுகளை
பொறுக்கிக் கொண்டே
வெளி வந்தேன்
அந்த ஊனமுற்றோர்களுக்கான
சிறப்பு வேலை வாய்ப்பு
அலுவலகத்தை விட்டு..........................

துவாரகாசாமிநாதன்
9629272185  

ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்

ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்

மெழுகு வர்த்தியா?
தங்க நிறமப் பிரகாசமா?
செந்நிறப்பிரிகையோ?
கரும்புகையோ?
 நீலமோ?
இதில் எது 'நான்'?

உரையாடலிலா?
ஆழ் மெளனத்திலா?
இதில் என்னுடைய 'நான்'
எங்கிருந்து பிறக்கிறது

எல்லோருக்குமாய் உருகினால் எனக்கு
என்ன பெயர்?
பிரகாசிப்பதிலும்
பிரகாசிக்க வேண்டுமென்பதிலும்
அடங்கிருக்கின்றன‌வா?எல்லோருடைய‌  'நானும்'

உண்மையில் நானே உருகும் போது
என்னவாகின்றேன்
இருளின் பரந்த வெளியில் மருளும் வாழ்க்கை
மெழுகின் ஒளியில் மிரண்டு
உருகினால் வருமோ? ஞானம்.

மெழுகு தீர்ந்தால் சகிக்க முடியாமல்
வந்தே தீரும் மரணம்
உருகும் எல்லா மெழுகுமே
இருள் போக்கத்தான் உருகுமோ?

ஒவ்வொரு முறையும்
என் வாழ்வு
விட்டில் பூச்சியாய் மாறும் போது
உன் அதிர்வுகளை
அடர்ந்த காட்டில்
நீரருந்தும் மான் போல
உணர்கிறேன்
எப்பொதுமே நிதர்சனமாய் ஒளிரும் நீ
ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்
உன் ஆத்ம விளக்கை ஏற்ற.........

துவாரகாசாமிநாதன்
9629272185