பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு -351குறள்.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு -355குறள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. -423குறள்.
மெய்பொருள் என எதைச் சொல்கிறார் அப்படியான உண்மைப் பொருள் என்ன இந்த உலகில் உள்ளது. பொருள் என்று நாம் பார்க்கும் யாவையும் அணுவின் கூட்டு நிகழ்ச்சிதான் ஐந்து பௌதீகப் பொருளில் கூட அணுவின் கூட்டும் இருக்கையில் எல்லாமே நிகழ்ச்சிதான். நமக்கு கற்பிக்கப் பட்ட உண்மையை பகுத்தறிவு கொண்டு பகுத்துப் பார்த்துக் கொண்டே போனால் பொய்யான உண்மை உண்மையான உண்மை எல்லாம் இருக்கிறதாவென ஒரு கேள்வி எழுகிறது. இதுதான் வள்ளுவரின் பொருள் முதல்வாதமா. மெய்ப்பொருள் எல்லாவற்றுள்ளும் இருக்கும் அறிவை உணர்தல் அறிதல் என்று எடுத்துக்கொண்டால் நமது சிந்தனைக்கு உவப்பாய் இருக்குமென நினைக்கிறேன். நாம் முன்னமே சொன்ன பேரறிவு சிந்தனையே சரியான தெளிவான உண்மையான பொருளாக இருக்கும். அணுவே அலைதான் எனும் போது அணுவை இயக்கும் மூலப்பொருள் என்னவாக இருக்கும் அலையே அல்லது அலையில்லா தன்மை கொண்ட பேரறிவே அதையே பரமானு என்று சித்தர்கள் சொல்கிறார்கள். வேதாத்ரி இறைத்துகள் என்கிறார். நாம் இங்கே பேரறிவு என்று எடுத்துக் கொள்கிறோம்.
ஒரு செங்கல்லை எடுத்து கொண்டு இடித்து பொடியாக்கி காற்றில் தூவி விட்டு பார்த்தால்பொருளாக இருந்த பொருள் காற்றில் கலந்து பரமானுத் துகளாக மாறி விடுகின்றன. மனித உடலும் மரணித்த பின் இப்படியான நிகழ்வே நடக்கிறது. இவ்வணுவை கூட்டியோ பிரிப்பதே சித்து விளையாட்டான அகிமா மகிமா எல்லாம். தற்போதைய விஞ்ஞானம் காற்றில் அணு திணிவைக் கூட்டி திரையாக பயன்படுத்தும் தொழில் நுட்பமே அந்தரத்தில் சினிமா முறை முயற்சி. (ஆய்வுக்குட்பட்டது).
அறிவு என்பது எப்போதும் மெய்யான பொருளை உணர்வதற்கான முயற்சியில் பகுத்தறிந்து பொருளில் நிகழ்வில் உயிரில் செயலில் இருக்கும் உண்மையான இருத்தலை பேரறிவை பேராற்றலை காலத்தை நுண்ணுணர்வை சமதளச்சீர்மை துல்லியத்தை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்பதே ஆகும்.
#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா