இந்த வலைப் பூ என்னுடைய மேலாண்மை மற்றும் வேதாத்ரிய கருத்துகளை பதியவும் எழுதவும் வைத்திருக்கிறேன். நான் மேலாண்மை மாணவர்களுக்கு பதினைந்து ஆண்டுகளாகவும், 20 ஆண்டுகளாக வேதாத்ரிய கருத்தை பேசி வருவதாலும் அதை எல்லாம் எழுத்தாக இந்த சமூகத்திற்கு சொல்லவே இவ்வலைப்பூ புதிப்பிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 30 டிசம்பர், 2014
மாதொரு பாகன் நாவலில்
திங்கள், 15 டிசம்பர், 2014
புதுத்துணி
புதுத்துணி
உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன...
உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன...
இரவு வரும் வருத்தத்தில்
மரங்கள் கனத்த இதயங்களுடன்
அசைவின்றி அரவமின்றி
ஊர்ந்து செல்கின்றன நரக ஊர்திகள்
மாடுகள் வீடு திரும்புவது
மறந்து புல் மேய்கின்றன.
அணில் குட்டியொன்று என் வீட்டுத் தாவரத்தில்
குதித்தோடிய போது
மாலைச் சூரியனின் தங்க நிறம் பூசியதாய் மின்னுகிறது.
அலைப்பேசிக் கம்பத்தில் அமரச்சென்ற ஊர்க்குருவிகள்
அலைப்பேசி அழைப்பின் அதிர்வுகளில்
கூடு திரும்புகின்றன.
தூதுவளை குத்தின் அடியில்
துணையைக் காணாது
கானங் கோழிகள் எட்டி எட்டி பார்க்கின்றன.
‘பேப்பர’; தின்கின்றன ஊர் காளைகள்;.
வயல் வெளிகளில் ‘பி;.டி’ நெல் விதைக்கப்பட்டுள்ளதாய்
சுடுகாட்டு விளம்பர பலகை போல்
ஒரு விபரீதப் பலகையில்
உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன
அதன் விளிம்பில்
தேன் சிட்டிற்கு விசம் கொடுக்கிறது
‘பிளாஸ்டிக் ரோசா’……
துவாரகா சாமிநாதன்
9629272185
வியாழன், 13 நவம்பர், 2014
என் வாழ்வில் வந்த நிறைய பராசக்தி தாய்கள்
சனி, 1 நவம்பர், 2014
எனக்கு கிடைத்த குருவினைப் பற்றி........
எனக்கு கிடைத்த குருவினைப் பற்றி........
நான் சிறிய வயதில் விவேகனந்தரை அவரது புத்தகத்தை குருவாக நினைந்து படித்தும் வணங்கியும் வந்தேன். அதன் பின் ஏசு நாதரை வணங்கினேன். அவர் வாசங்களை நான் பின் தொடர்ந்தேன். 1995 பத்தாவது மாதம் எனக்கு வேதாத்ரி கிடைத்தார் அதன் பின் தான் என் வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்தது, நான் 12ம் வகுப்பு தவறியிருந்தேன், தேறினேன். தொடர்ச்சியாக தவறான நண்பர்களால் வழி நடத்தப்பட்டு ஜெயிலுக்கும் சென்று வந்தேன். அத்தவறுகளை உணர்ந்தேன். இராச இராச சோழன் என்பவரை சந்தித்தேன் அவர்தான் எனக்கு காந்தியைப் பற்றி விரிவான விவாதம் நடத்த அனுமதி தந்து காந்தியின் அஹிம்சையை பின்பற்ற செய்தார். காமம் பற்றிய விரிவான கருத்துக்களை ஒசோவிடம் கற்றேன். அதை தொடர்ந்து வேதாத்ரிய சிந்தனைகளை ஆர்.வி.கணேசனிடம் நிறைய கேள்விகள் கேட்டு விவாதம் செய்தேன் குருவயே குறை கூறினேன். ஆனாலும் அவரையே பின் பற்றினேன். இப்படி நிறைய குருக்கள் எனக்கு கிடைத்தாலும்.
தற்போது கிடைத்த இருவர்தான் என்னை தெளிவான பாதையில் பயணிக்க செய்துள்ளர்கள்.. அவரில் ஒருவர் செசி அமைப்பு செயலாள்ர் திரு செயபிரகாசம், அவர் பாதையும் காந்திய பார்வைதான் மேலும் அமைதி, எளிமை, செயலின் முன்னுதாரன புருசர். அனுபூதியான ஞான பெட்டகம். அவர் ஒரு அறிவுக்களஞ்சியம், அறிவு ஜீவி. அவர் மாயா அன்னையைப் பற்றி சொல்லும் விதம், காந்தியைப் பற்றி பார்க்கும் கோணம் நம்மை திருத்தியமைக்கும். நம் வாழ்வின் பணியை உணர்த்தும். மதுரையில் வாழ்ந்து நிறைய பேரை வாழ்விலிருந்து பெருவாழ்விற்கு கொண்டு செல்லுகிறார். என்னையும் அப்படிதான் செய்தார்.
இரண்டாமவர் புதுக்கோட்டையில் இஞ்னியருக்கு படித்துவிட்டு விவசாயம் பண்ணிக்கொண்டு நிறைய பேரை வாழ வைத்துக் கொண்டுள்ளார். அவர்தான் முத்துகுமரேசன் அய்யா. எனது தற்போதய குரு என்னை செதுக்கும் சிற்பி, என் வாழ்வை செப்பணிடும் விவசாயி. மண்ணை செப்பணிடுவது போல். தன் வீட்டிலேயே தவ மையம் வைத்துக்கொண்டு அதை ஒரு பன் முக பல்கலைக்கூடமாக வைத்து பல வருடமாக நடத்தி வருகிறார். இவரின் ஆன்மீக மக்களின் சேவை மட்டுமே. குறையுடைய ஆன்மீகவதிகளை உலுக்கி எடுப்பார். அரைகுறைகளை தட்டி விடுவார். பயம் கொள்ளார். எங்களை போன்றோருக்கு வழி காட்டியாகவும், ஒரு லிடராகவும். பணிவு சொல்லி தரும் பண்பாளராகவும் இருக்கிறார்.
சிலர் மிளகாயை வடையில் போட்டு வேக வைப்பார்கள் காரம் கம்மியாகத்தான் இருக்கும், ஆனால் அதையே அடுப்பில், நெருப்பில் போட்டால் என்னாகும் பாருங்கள். அந்த வேலைத்தான் இந்த இருவரும் செய்கிறார்கள். எங்களை போன்றோரைப் பிடித்து நெருப்பில் போட்டு காரத்தை ஆன்மாவில் கூட்டுகிறார்கள்.
அது போல நிறை குடம் தழும்பாது என்பார்கள். ஓட்டை குடமும் தழும்பாது என்பதை புரிந்து கொண்டு இதுபோல நல்ல குருவினை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள். உங்கள் குரு நிறை குடமா? ஓட்டை குடமுமா? என்பதை உணருங்கள். அவர்களை நிறைய பரிசோதனை செய்யுங்கள் அதற்கு அனுமதி தருகிறார்களா? என்று பாருங்கள். ஒரு நல்ல குரு தன்னை மறைத்துக்கொண்டு மாணவரை முன்னிருத்துகிறார்.
நன்றி வாழ்க வளமுடன்...
துவாரகா சாமி நாதன்
9629272185
செவ்வாய், 28 அக்டோபர், 2014
இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள்
இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள்
அது ஒரு இருளான குகை
உற்ற தோழனோடுதான் சென்றேன்
இருவரும்
இருளை படிக்க முற்பட்டோம்
அதற்குள்
இருள் என்னை அதனுள் அமிழ்த்தி விளையாடியது
எனக்கோ மூச்சு முட்டிக்கொண்டு வந்தது
நண்பன் சொன்னான்
தான் இருளை நேசிப்பதாகவும்
தன்னையே இருளாக்கி பார்ப்பதாகவும்
அப்போது
அவனுக்குள்
மஞ்சள் ஒளி தெரிந்தது
அந்த ஒளியைக்கொண்டுதான்
நாங்கள்
வீட்டுக்குள்ளிருந்த இருளைப்படித்தோம்
தெரு ஓரத்திலிருந்த இருளையும் பார்த்தோம்
என் ஆழ் மனத்திற்குள்ளிருந்த
அம்மாவின் கருவறை இருளைக் கூட பார்த்தோம்
மெல்ல இருள் இருளிலேயே கரைந்து மஞ்சள் ஒளி
வெண்மையானது
இதனைக்கொண்டுதான்
நாங்கள்
புதியவுலகை
கட்டமைக்க இருக்கிறோம்
புதியன நிறைய
படைக்க இருக்கிறோம்
அந்த ஒளியைக்கொண்டுதான்
இவ்வுலகை
இருளிலிருந்து ஒளிக்கும்
வாழ்விலிருந்து பெரு வாழ்வுக்கும்
கொண்டு செல்லயிருக்கிறோம்
அந்த குகை இருளுக்குள்ளேதான்
இந்த மஞ்சள் ஒளியும்
ஒளிந்திருந்ததெனவும்
ஒளிதான் இருளை மறைக்கிறதெனவும்
செய பிரகாசம் சொன்னார்
என் கண்ணில் ஊனம்... மனம் போலவே
அந்த குகைக்குள்தான்
ஒரு கருப்பு தேவதை பழக் கூடை சுமந்து வந்தாள்
கண்ணாடியணிந்த
கிழவர் தறி சுற்றிக்கொண்டிருந்தார்
இவர்கள் தங்கள் ஒளியைக் கொண்டுதான்
எங்களை அடையாளம் கண்டார்கள்
அவர்களையும் இருளாகத்தான் பார்த்தோம்
எங்களுக்குள் ஒளி வரும் வரை...........
எப்படியோ
நாங்கள் இருளை நேசிக்க
கொஞ்சம் ஒளி பெற்று வந்தோம்.
எங்கள் மனத்தடியில் கிடக்கும்
கசடை போக்க.........
துவாரகா சாமி நாதன்
9629272185
வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014
திங்கள், 28 ஜூலை, 2014
குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்
குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்
நேற்று நண்பனுடன் உரையாடிய பின்னும்
கற்பமான மனைவியைக் கூட்டிக்கொண்டு
அவளின் 'கார்' வாங்கும் கனவுடன்
அங்கு சென்றேன்
காத்திருப்பு
அங்காலாய்ப்பு இடையிடையே
காதல் தகிப்பு
ஊடல் பகிர்வு
சிறு எரிச்சல்
அவளுக்கு வியர்த்தது
எனக்கும்
அவளுக்கு பதிலாக வரிசையில்
என்னை போலவே கனவுகளை முதுகில் சுமந்து கொண்டு
நிறைய பேர்
வேண்டாம் என்று தோன்றும் போது
'கார்' கனவு விண்ணப்பம்
அவளின் கண்ணுக்குள் தெரியும்
நண்பனின் அலைபேசி அழைப்பு ஊடறுக்கும்
இடையில் குறுக்கிட்டு
அலுவலக த் தொழிலாளி வேறு
'கார்டு' வந்ததா?
எல்லாம் சரியாக உள்ளதா? என்று கேட்டான்
முகவரி மாறியதை எழுததாற்கு
என் அலைச்சல்களின் கோப அம்புகளை
அவன் மீது பாய்ச்சினேன்
துடைத்துக் கொண்டே அவன் ஒரே பாட்டையே
திரும்பவும் பாடினான்
முக்கியமான 'தாள்' இருக்கா என்றான்
குறைவாக உள்ள்து என்றேன்
எல்லாம் சரியாகி உள்ளே போகும் முன்
நண்பன் வேகமாக வந்து
விண்ணப்பத்தை கிழித்துப்போட்டு
மனைவியையும் இழுத்துக் கொண்டு சென்றான்
நான் மட்டும்
வேகா தலையுடனும் சாகா காலுடனும்
கீழ் கொட்டிய மன அதிர்வுகளை
பொறுக்கிக் கொண்டே
வெளி வந்தேன்
அந்த ஊனமுற்றோர்களுக்கான
சிறப்பு வேலை வாய்ப்பு
அலுவலகத்தை விட்டு..........................
9629272185
ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்
ஒளிர்ந்த
பின் எங்கே போகிறாய்
மெழுகு வர்த்தியா?
தங்க நிறமப் பிரகாசமா?
செந்நிறப்பிரிகையோ?
கரும்புகையோ?
நீலமோ?
இதில் எது 'நான்'?
உரையாடலிலா?
ஆழ் மெளனத்திலா?
இதில் என்னுடைய 'நான்'
எங்கிருந்து பிறக்கிறது
எல்லோருக்குமாய் உருகினால் எனக்கு
என்ன பெயர்?
பிரகாசிப்பதிலும்
பிரகாசிக்க வேண்டுமென்பதிலும்
அடங்கிருக்கின்றனவா?எல்லோருடைய 'நானும்'
உண்மையில் நானே உருகும் போது
என்னவாகின்றேன்
இருளின் பரந்த வெளியில் மருளும் வாழ்க்கை
மெழுகின் ஒளியில் மிரண்டு
உருகினால் வருமோ? ஞானம்.
மெழுகு தீர்ந்தால் சகிக்க முடியாமல்
வந்தே தீரும் மரணம்
உருகும் எல்லா மெழுகுமே
இருள் போக்கத்தான் உருகுமோ?
ஒவ்வொரு முறையும்
என் வாழ்வு
விட்டில் பூச்சியாய் மாறும் போது
உன் அதிர்வுகளை
அடர்ந்த காட்டில்
நீரருந்தும் மான் போல
உணர்கிறேன்
எப்பொதுமே நிதர்சனமாய் ஒளிரும் நீ
ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்
உன் ஆத்ம விளக்கை ஏற்ற.........
துவாரகாசாமிநாதன்
9629272185
மெழுகு வர்த்தியா?
தங்க நிறமப் பிரகாசமா?
செந்நிறப்பிரிகையோ?
கரும்புகையோ?
நீலமோ?
இதில் எது 'நான்'?
உரையாடலிலா?
ஆழ் மெளனத்திலா?
இதில் என்னுடைய 'நான்'
எங்கிருந்து பிறக்கிறது
எல்லோருக்குமாய் உருகினால் எனக்கு
என்ன பெயர்?
பிரகாசிப்பதிலும்
பிரகாசிக்க வேண்டுமென்பதிலும்
அடங்கிருக்கின்றனவா?எல்லோருடைய 'நானும்'
உண்மையில் நானே உருகும் போது
என்னவாகின்றேன்
இருளின் பரந்த வெளியில் மருளும் வாழ்க்கை
மெழுகின் ஒளியில் மிரண்டு
உருகினால் வருமோ? ஞானம்.
மெழுகு தீர்ந்தால் சகிக்க முடியாமல்
வந்தே தீரும் மரணம்
உருகும் எல்லா மெழுகுமே
இருள் போக்கத்தான் உருகுமோ?
ஒவ்வொரு முறையும்
என் வாழ்வு
விட்டில் பூச்சியாய் மாறும் போது
உன் அதிர்வுகளை
அடர்ந்த காட்டில்
நீரருந்தும் மான் போல
உணர்கிறேன்
எப்பொதுமே நிதர்சனமாய் ஒளிரும் நீ
ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்
உன் ஆத்ம விளக்கை ஏற்ற.........
துவாரகாசாமிநாதன்
9629272185
சனி, 8 பிப்ரவரி, 2014
இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது
இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
எதைக்கொண்டும்
நிரப்பி விட முடிவதில்லை
எனது வெற்றிடத்தை...!
வியர்த்து வெளியேறுகிறது
எனது வெறுமை....!
கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய்
தொங்கி கொண்டிருக்கிறேன்
அதன் விளிம்பில்....!
கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன்
எனது வெற்றிடத்தை...!
வெறுமை
எல்லா உணர்வுகளின்
கலவையாக வெறுமை
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.
கிளைகளில்லா மரம் போல
மரத்துப்போகிறது மனம்
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன
ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம்
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில்
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!
வெற்றிடம்
தோன்றி மறைகிறது
இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன
கவிதையால்.....!
துவராகா சாமிநாதன்
9629272185
எதைக்கொண்டும்
நிரப்பி விட முடிவதில்லை
எனது வெற்றிடத்தை...!
வியர்த்து வெளியேறுகிறது
எனது வெறுமை....!
கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய்
தொங்கி கொண்டிருக்கிறேன்
அதன் விளிம்பில்....!
கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன்
எனது வெற்றிடத்தை...!
வெறுமை
எல்லா உணர்வுகளின்
கலவையாக வெறுமை
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.
கிளைகளில்லா மரம் போல
மரத்துப்போகிறது மனம்
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன
ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம்
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில்
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!
வெற்றிடம்
தோன்றி மறைகிறது
இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன
கவிதையால்.....!
துவராகா சாமிநாதன்
9629272185
திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை
திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை
எந்த குறுக்கீடுகளுமில்லாமல்
எனது ஆன்மாவை
மீட்டுகின்றன மரங்கள்....!
தனிமையில்
எனது உணர்வு நரம்புகள்
அறுந்து விழுகின்றன...!
நான் திரும்பவும்
நேசிக்கிறேன்
மரணத்தையும்
தனிமையும்
நம் வாழ்வையும்....!
எனது ஆன்மா
கண்ணாடித்துகல்களாய்....!
உடைந்து நொறுங்கி
விழுகிறது
ஒரே நிசப்தம்...!
கடைசியாய் ஒன்று
நீதானே
எனது புதிய சொர்க்கத்தை
கண்டு கொடுத்தாய்
மெதுவாக மூழ்குகிறேன்....!
உன்னில் நான்.
துவாரகா சாமிநாதன்
9629272185
எந்த குறுக்கீடுகளுமில்லாமல்
எனது ஆன்மாவை
மீட்டுகின்றன மரங்கள்....!
தனிமையில்
எனது உணர்வு நரம்புகள்
அறுந்து விழுகின்றன...!
நான் திரும்பவும்
நேசிக்கிறேன்
மரணத்தையும்
தனிமையும்
நம் வாழ்வையும்....!
எனது ஆன்மா
கண்ணாடித்துகல்களாய்....!
உடைந்து நொறுங்கி
விழுகிறது
ஒரே நிசப்தம்...!
கடைசியாய் ஒன்று
நீதானே
எனது புதிய சொர்க்கத்தை
கண்டு கொடுத்தாய்
மெதுவாக மூழ்குகிறேன்....!
உன்னில் நான்.
துவாரகா சாமிநாதன்
9629272185
என் கவிதைகள்
துன்பத்திலிருந்து
விடுதலை வேண்டி
கதறி அழுகிறேன் ....!
ஆழ்ந்த மவுனம்.
வீரிட்டு எழுகிறேன் பாதியில்
காமத்தின் உட்புகுந்து தேடுகிறேன்
என்னை ....!
உயிர் சிதறி
தெறித் தோடுகிறது பிரபஞ்சத்தில்
வ(ழி)(லி)யின்றி....!
அவள் உடல் பியித்து போடுகிறாள்
எங்கும் நிலை கொள்ளாமல்
அலைகிறது மனம்
பிய்ந்து தொங்குகிறது கலையில் கொஞ்சம்.
உடல் சிராய்த்து சிவப்பில் தேடுகிறேன்
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.
நீரின்றி வாடுகிறது வேர்
மலர் இன்னும் மலரவில்லை....!
ஆணவப் பூச்சில் முகம் விகாரமானது
ஆழ உட்புகுந்து போய்க்கொண்டிருக்கிறேன்
இன்னும் தேடிய பாடில்லை...! இருத்தலை
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.
தற்செயலாய் பிரபஞ்ச நுனி எட்டிப்
பார்க்கிறது என்னுள் .....!
காலத்தின் வேகத்தினை எட்டி
பிடிக்க முடியவில்லை
என்னை திறந்து மூடவே
நேரம் சரியாகிவிடுகிறது
திறந்து போடவா ? மூடவா? குழப்பத்தில் நான்!
கடைசியில் வாழ்வே மாயம்
கால வெளிதனில்
துன்பமும் இன்பமும்
திறந்து மூடுகிறது என் வாழ்வை..!
துவாரகா சாமிநாதன்
9629272185
விடுதலை வேண்டி
கதறி அழுகிறேன் ....!
ஆழ்ந்த மவுனம்.
வீரிட்டு எழுகிறேன் பாதியில்
காமத்தின் உட்புகுந்து தேடுகிறேன்
என்னை ....!
உயிர் சிதறி
தெறித் தோடுகிறது பிரபஞ்சத்தில்
வ(ழி)(லி)யின்றி....!
அவள் உடல் பியித்து போடுகிறாள்
எங்கும் நிலை கொள்ளாமல்
அலைகிறது மனம்
பிய்ந்து தொங்குகிறது கலையில் கொஞ்சம்.
உடல் சிராய்த்து சிவப்பில் தேடுகிறேன்
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.
நீரின்றி வாடுகிறது வேர்
மலர் இன்னும் மலரவில்லை....!
ஆணவப் பூச்சில் முகம் விகாரமானது
ஆழ உட்புகுந்து போய்க்கொண்டிருக்கிறேன்
இன்னும் தேடிய பாடில்லை...! இருத்தலை
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.
தற்செயலாய் பிரபஞ்ச நுனி எட்டிப்
பார்க்கிறது என்னுள் .....!
காலத்தின் வேகத்தினை எட்டி
பிடிக்க முடியவில்லை
என்னை திறந்து மூடவே
நேரம் சரியாகிவிடுகிறது
திறந்து போடவா ? மூடவா? குழப்பத்தில் நான்!
கடைசியில் வாழ்வே மாயம்
கால வெளிதனில்
துன்பமும் இன்பமும்
திறந்து மூடுகிறது என் வாழ்வை..!
துவாரகா சாமிநாதன்
9629272185
நரகத்தின் வாயிலிலிருந்து
நரகத்தின்
வாயிலிலிருந்து
நான் ஏன் அப்படி
செய்தேன்?
என்னுள்
அது எப்படி நிகழ் ந்தது?
யாவரும்
அடக்கி வைத்த காமத்தை
என்னுள்
புதைத்து விட்டார்களோ?
மனித காமத்தின் மொத்த வடிகாலாய்
நான் மாறி விட்டேனா?
புராதன
நகரத்தில் பிறந்த நானா அப்படி
செய்தேன்?
அ ந் நகரத்தின் இசை
கேட்காமல் இப்படி ஆகி விட்டேனொ?
எந்த பழத்தை தின்றதற்காக
எனக்கு
இந்த தண்டனை...
யோனிகளில்
வேறுபாடு பார்க்காமல் விட்டுவிட்டேனா?
மனித ஆன்மாவில் இன்னும் மிருகம் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு
உதாரணமாகி விட்டேனா?
அய்யகோ!
பாதகி....எனக்கு மகளாய் வந்து
பிற ந்தாளே!
மகளே ஆயிசா என்னை மன்னித்து
விடு....
சட்டங்களை
விட மன்னிப்புதான் மாற்றம் தரும்.
எந்த கடவுளாவது இந்த திருவிளையாடலை நடத்தியதற்கு
பொறுப்பேற்றுக் கொள்ளுமா?
விதியே!
எந்த நேரத்தில் எனை கருவுற்றாய்
ஊடகத்தில்
தங்கமீன்களை பார்க்காமல்
தகாதவற்றை
பார்த்து தொலைத்தேனே...
இந்த சமூகத்தின் இழிவான பார்வை என்
மகள் பெற்ற மகவுகளின் மேல்
விழாமல் மறைத்து வையுங்கள் இந்த
கவிதையை
எந்த முறையிலும் ஆவணப்படுத்தாதீர்..
நானே கடைசியாய்
நரகத்தின் வாயிலில்
இனி இந்த உடலும் இந்த
பிறப்பும் வேண்டாம்
காசிக்கு
போவதற்குள்
இங்கேயே
பிணமாய்
உலகத்தின்
ஒட்டு மொத்த அழுத்தத்தால்....
துவாரகாசாமி
நாதன்
9629272185
வியாழன், 30 ஜனவரி, 2014
முக நூல்
முக நூல்
எனது வன்மங்களை
பிரதியிடும்
போது
சில
விளம்பர
படுத்தலும் நிகழ்ந்து விடுகிறது
ஒவ்வொரு
முகஙகளிலும் தேடுகிறேன் நல்லவைகள் ஒட்டியிருக்கின்றதாயென
வலைத்தளங்களின்
வலைகளில்
இண்டு இடுக்கெல்லாம் ஒடுகிறது
எனது எலி மனம்
சில வேளைகளில் அங்கே கொட்டப்படும்
வன்மங்களின்
குப்பைகளில்
விசாரிப்புகளில்
விமர்சனங்களில்
புதைந்து
சிதைந்தும் விடுகிறேன்
மனச்சிக்களின்
கார்ணமாக அதன் நடுப்பக்கத்தில்
செருகப்பட்டுவிடுகிறேன்
சில சொடுக்குகளில் விபரீதம் நடத்துகிறேன்
சில இடுகைகளில்
உற்சாகமடைகிறேன்
கருப்பு,
சிகப்பு, வெள்ளை மஞ்சள் நீலமென நிரம்பி வழிகிறது
என் முகமெங்கும்
எல்லோருடைய
மனங்களில் எழும்
வெற்றிடத்தை
நிரப்பிக் கொள்ளும்
தொட்டியாய்
இந்த முக நூல்.........
துவாரகா சாமி
நாதன்
9629272185
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
