செவ்வாய், 30 டிசம்பர், 2014

மாதொரு பாகன் நாவலில்


வரும் வரலாறு, மனிதன் குழுவாக வாழ்ந்த காலத்தில் இது நடந்தது மட்டுமில்லை திருவிழாவின் நோக்கமே கட்டற்ற் காமத்தை குறைக்கவும் அனுபவிக்கவுமே மேலும் கூத்தாண்டவர் கோயில், முருகன் கோயில் , திருச்சங்கோடு திருவிழவும் உண்டு இப்படி நிறைய கோயிலில் தேவரடியார்கள் இருந்து இத்தொண்டை செய்த்தற்கு கள ஆய்வுகள் உள்ளன...... தாங்கள் நிச்சயம் ஏங்கல்சின்'குடும்பம், அரசு, தனிச்சொத்து' புத்தகம் வாங்கி படித்துவிட்டும் ஏதாவது ஆதராம் கிடைக்குதன்னு பாருங்க தோழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இவற்றை கள ஆய்வு செய்தே பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார் என்று நம்புவாமாக.... இப்படி அதை எழுதாதே, இதை எழுதாதே என்றால் எழுத்து சுதந்திரம் என்னாவது? இவர்கள் சொல்லும் தேவ பாடையில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்ன? ஆட்ட கடிச்சி, மாட்டகடிச்சி இப்ப நம்பள கடிக்க வந்துட்டானுவோ... வுட முடியாதுங்கோ..... இந்த நாவல் பெண்களை இழிவு படுத்த அவர் எழுதவில்லை.... அப்போ இப்ப வித்து கடன் பெற்று குழந்தை பெறுவது மட்டும் என்ன?..... துவரகாசாமிநாதன்

திங்கள், 15 டிசம்பர், 2014

புதுத்துணி



புதுத்துணி எப்போதும் சூட்டில பிளக்கும்; எண்ணெய் குமிழியாய் கும்பல் கும்பலாய் தடுமாறித் தவிக்கும் தீபாவளி சவுளிக்கடையில் நானும் நண்பனும் ஏங்கித் தவிக்கிறது எழுபது ரூபாய் சட்டை பேத்திக்கு ஆடையெடுக்க அறுபது ரூபாயுடன் அலைபாயும் கிழவன் எதை எடுத்தாலும் ஒரே விலை எழுபது என்னையும் மனைவியையும் தவிர கூவியழைக்கும் தன் நெஞ்சம் பாராத வியாபாரி. துவாரகா சாமிநாதன் 9629272185

அழுக்குச் சட்டை கறை படிந்த சட்டைகளால் நிரம்பி வழிகிறது என் வீட்டு அறை துவைத்துப் பார்க்கிறேன் அலசி கழுவி கசக்கி பிழிகிறேன் நனைத்துத் திரும்பவும் ஊற வைக்கிறேன் நையப்புடைக்கிறேன். சட்டையின் கறை போகவில்லை மனைவியிடம் கொடுத்துப்பார்த்தேன் குழந்தையும் பழகிப் பார்த்தாள் சட்டையின் கறையைப்போக்க அம்மாவையும் அழைத்தேன் ஆடையின் கறை வெழுக்க முடியாதென்றதோடு தந்தையின் கறைப் பற்றியும் நொந்து கொண்டாள் உலகமய விளம்பரம் சொல்கின்றன கறை நல்லதாம் கை மடிப்பு கறை காக்கையின் எச்சம் இரத்தக் கறை மற்றும் தீக்கறை காலங்களின்;; எதிரெதிர் நிலையால் வாழ்வின் தத்துவங்கள் கறை படிந்த சட்டையில் பிரிந்த நூலாய் தொங்குகின்றன. கறையை மட்டுமே சுட்டிக்காண்பிக்கின்றது உலகம் கறை படிந்த உள்ளத்தை அணிந்து கொண்டு விரிகிறது என் வானம் சுருங்கிய சட்டையுடன். எந்த அவதார வண்ணானும் வராததால் வர்ண சட்டையின் கறையை போக்க முடியா கையாலாகத்தனத்துடன் நிர்வாணமாய் உலகத்தை பிரதிபலிக்கும் நான். துவாரகா சாமிநாதன் 9629272185

புதுத்துணி


புதுத்துணி எப்போதும் சூட்டில பிளக்கும்; எண்ணெய் குமிழியாய் கும்பல் கும்பலாய் தடுமாறித் தவிக்கும் தீபாவளி சவுளிக்கடையில் நானும் நண்பனும் ஏங்கித் தவிக்கிறது எழுபது ரூபாய் சட்டை பேத்திக்கு ஆடையெடுக்க அறுபது ரூபாயுடன் அலைபாயும் கிழவன் எதை எடுத்தாலும் ஒரே விலை எழுபது என்னையும் மனைவியையும் தவிர கூவியழைக்கும் தன் நெஞ்சம் பாராத வியாபாரி. துவாரகா சாமிநாதன் 9629272185

உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன...

உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன... இரவு வரும் வருத்தத்தில் மரங்கள் கனத்த இதயங்களுடன் அசைவின்றி அரவமின்றி ஊர்ந்து செல்கின்றன நரக ஊர்திகள் மாடுகள் வீடு திரும்புவது மறந்து புல் மேய்கின்றன. அணில் குட்டியொன்று என் வீட்டுத் தாவரத்தில் குதித்தோடிய போது மாலைச் சூரியனின் தங்க நிறம் பூசியதாய் மின்னுகிறது. அலைப்பேசிக் கம்பத்தில் அமரச்சென்ற ஊர்க்குருவிகள் அலைப்பேசி அழைப்பின் அதிர்வுகளில் கூடு திரும்புகின்றன. தூதுவளை குத்தின் அடியில் துணையைக் காணாது கானங் கோழிகள் எட்டி எட்டி பார்க்கின்றன. ‘பேப்பர’; தின்கின்றன ஊர் காளைகள்;. வயல் வெளிகளில் ‘பி;.டி’ நெல் விதைக்கப்பட்டுள்ளதாய் சுடுகாட்டு விளம்பர பலகை போல் ஒரு விபரீதப் பலகையில் உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன அதன் விளிம்பில் தேன் சிட்டிற்கு விசம் கொடுக்கிறது ‘பிளாஸ்டிக் ரோசா’…… துவாரகா சாமிநாதன் 9629272185