செவ்வாய், 10 மார்ச், 2015

உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன


உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன இரவு வரும் வருத்தத்தில் மரங்கள் கனத்த இதயங்களுடன் அசைவின்றி அரவமின்றி ஊர்ந்து செல்கின்றன நரக ஊர்திகள் மாடுகள் வீடு திரும்புவது மறந்து புல் மேய்கின்றன. அணில் குட்டியொன்று என் வீட்டுத் தாவரத்தில் குதித்தோடிய போது மாலைச் சூரியனின் தங்க நிறம் பூசியதாய் மின்னுகிறது. அலைப்பேசிக் கம்பத்தில் அமரச்சென்ற ஊர்க்குருவிகள் அலைப்பேசி அழைப்பின் அதிர்வுகளில் கூடு திரும்புகின்றன. தூதுவளை குத்தின் அடியில் துணையைக் காணாது கானங் கோழிகள் எட்டி எட்டி பார்க்கின்றன. ‘பேப்பர’; தின்கின்றன ஊர் காளைகள்;. வயல் வெளிகளில் ‘பி;.டி’ நெல் விதைக்கப்பட்டுள்ளதாய் சுடுகாட்டு விளம்பர பலகை போல் ஒரு விபரீதப் பலகையில் உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன அதன் விளிம்பில் தேன் சிட்டிற்கு விசம் கொடுக்கிறது ‘பிளாஸ்டிக் ரோசா’…… துவாரகா சாமிநாதன் 9629272185

நானே…..


நானே….. சிறுவயதில் ஊசித்தட்டானை ராசா தட்டானுக்கு ஊணவளித்து மகிழ்ந்ததிலுள்ள குரூரம் விளங்கியது அறுபது வயதில் இப்போது தேன் மிட்டாய்; தின்னக்கேட்கிறேன் பேத்தியிடம் அந்த வயதில் ஓணானுக்கு புகையிலை கொடுத்து அதன் போதையைக் கண்டு மகிழ்ந்தது மேலும் அதன் வாயில் மூத்திரம் பேய்ந்ததில் என்ன அரசியல் இருந்திருக்க முடியும் குழந்தைகளின் மனதில் மழை பெய்ய ஏதேனும் அரசியல் காரணம் வேண்டுமா? ஏன எதிர் வீட்டு அத்தையின் இடுப்பு ரசிக்க அடிக்கடி அவள் வீட்டுக்கு செல்வதின் அவசியம் அவளுக்கு புரியாமலில்லை. வயதொத்த வயதளித்த குரூரமும் குறும்பும் என்னுடனானதே இயல்பாய் நானே இருக்கிறேன் எல்லாவற்றிலும்….. ஆனால் என்ன என்னோடு விளையாடும் பேத்தியை மருமகள் அதட்டி உள்ளழைக்கும் போது மட்டும் மரங்கொத்தி; பிய்த்துப் போடுகிறது. துவாரகா சாமிநாதன் 9629272185

என் வீட்டு கண்ணாடி


என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின் வரிகளில் எனது எல்லா பிம்பங்களும் தெளிவாய்த் தெரிகின்றன. என்னை அப்படியே காட்டுகிறது மறைக்காமல் என் பிம்பங்களின் பிரதிபலிப்பில் இயற்கையும் அதனோடு கூடிய வாழ்வும் என்னுள் பனி படலமாய் கண்ணாடி விளிம்புகளில் புகையாய் நானே இயற்கையுமாய்…. என் வீட்டு கண்ணாடியில் தெரிகிறேன் எந்த அரிதாரமுமில்லாமல் எதையுமே மறைக்காமல் எனது உண்மை பிம்பம் உணரத்துகிறது என் வீட்டு கண்ணாடி….. துவாரகா சாமிநாதன் 9629272185

கீழானவையெல்லாம் உயர்வானதுமல்ல மேலானதெல்லாம் கீழானதே.........


கீழானவையெல்லாம் உயர்வானதுமல்ல மேலானதெல்லாம் கீழானதே......... சரியென்றும் தவறு என்றும் ஒன்று எப்போதும் இந்த உலகில் கிடையாது... முன்பெல்லாம் கவிதை அனுப்பினால் தங்களால் பிரசூரிக்க முடியவில்லையானால் முடியவில்லை என்று சொன்னீர்கள். இப்போது.. சரியானவற்றை பிரசூரிக்க மட்டுமே மலைகள் என்கிறீர்கள். தரம் என்கிறீர்கள். என்னுடைய கவிதையை நீங்கள் தரமிட வேண்டாம்.....நான் குழந்தையாகவே இருந்துவிட்டு போகிறேன். இது ஒரு முயற்சிதான். தரத்தை யார் முடிவு பண்ண வேண்டும் வாசகனா...அல்லது நீங்களா?.. சரி நீங்கள் ஒரு நல்ல வாசகத்தளத்தை உண்டு பன்னுகிறீர்கள் என்றால்... அந்த தரத்தையும் நீங்கள் ஒரு ஆள் மட்டும் எப்படி முடிவு செய்யவது ஒரு ஜனநாயக முறையில் முடிவு செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டுமல்லவா?.... அப்படியில்லை என்றால் இது ஒரு பாசிச செயலாகுமா? தரத்தின் உயரம் உங்கள் மலைகளல்ல..நானும் தவழ்ந்தாவது சில சிகரத்தை தொட முயற்சிக்கிறேன். எந்த அங்கீகாரத்தையும் பெற உங்களுக்கு நான் கவிதை அனுப்பவில்லை. இது ஒரு முயற்சி. முதலில் நமக்குள் ஒரு புரிதல் இல்லை நான் டமில் வாத்தியில்லை...ஒரு மேலாண்மையியல் படித்தவன்..மேலும் நீங்களெல்லாம் பாராட்டினால்தான், நான் தமிழில் நிறைய எழுத முடியும். நான் வேறு தவழும் குழந்தைதான். நான் வாசிப்பில் தவழ்ந்துதான். வருகிறேன்., உங்களுக்கு தமிழ் ஆசிரியருகளின் மேல் தீராத பகை இருக்கிறதென் புரிகிறது தோழர்.....எனக்கு சிலவற்றை தமிழில் சொல்ல வரவில்லை ஆதலால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன். ஒரு விதையின் முளையை வளரும்போதே வெட்டிய பாவம் உங்களை வந்து சேர வேண்டாம்..என்னை விட்டுவிடுங்கள். பாவம் நான் எந்த அகந்தையுமில்லாமல் சொல்லுகிறேன். நேரே பார்த்தும் இது பற்றி விவாதிப்போம். ஆனால் சண்டை போட என்னால் முடியாது. உங்கள் அளவு புத்தகம் படிக்கவில்லை. ஆனால் மனிதர்களை நிறைய படித்திருக்கிரேன். அதில் நீங்கள் சொல்லுவதுபோல் கூட்டம் சேர்க்கும் ஆள் நானில்லை. நீஙளுமில்லையென நம்புகிறேன்...எனது ஒரு முயற்சியில்தான் நான் எழுதியுள்ளேன், யாரையும் பின்பற்றில்லை. வாத்திக்கு மாணவரிடத்தில் காண்பிக்க என்ன இருக்கிறது. வாத்தியார்தனம் என்பதென்ன.....நான் ஒருபோதும் பெரியவனில்லை. இந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு கொசு போல...தவழ்ந்து வருகிறேன். அண்ணா நீங்கள் உங்கள் இலக்கியப் பணியை செவ்வனே செய்ய பிரார்த்திறேன். ஆனால் திரும்பவும் முதலில் சொன்னதுதான் தரம் பார்த்து பார்த்து எந்த கவிஞனும் எழுதவில்லை எல்லோரும் எழுதினார்கள். தரம் வாசகனால் கொடுக்கப் பட்டது..புதுபுது முயற்சி செய்தார்கள் வளர்ந்தார்கள். ஜெயமோகனும், சுந்தரராமசாமியும், சுஜாதாவும் குமுதத்திலும் சாதாரண பத்திரிக்கைகளிலும் எழுதிதான் இப்போது வளர்ந்து ஆலமரமாய் நிற்கிறார்கள்........ இது சிலருக்கு பதிலாக நான் எழுத நினைத்தது. மேலும் கலை யாருக்காக படைக்கிறோம், எதன் நோக்கில் எழுதுகிறோம் என்பதே தெரியாமலா? எழுதுவான் ஒருவன். எது? நல்ல இலக்கியம் என்பது இன்றளவும் எழுதுகின்ற ஒவ்வொருவரும் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது. சிலர்தான் உலகத்திலேயே இலக்கியத்தை காக்க வந்த தூதுவர்களைப் போல ஆபத்பாந்தவர்கள் போல நடந்து கொண்டால் சாதரண மனிதர்களுக்கான் இலக்கியம் என்னாவது. எல்லொரும் கவிதையை அறிவுஜீவிக்களுக்கு மட்டுமெ எழுதினால் யார்தான் சாதாரண மக்களுக்கு எழுதுவது. சாதாரண் மக்கள் புரிந்து கொண்டால்தானே பல மாற்றாங்களைக் கொண்டு வர முடியும். தரம் என்று இவர்கள் எதை சொல்கிறார்கள். ஏதோ ஒரு மூளையில், யாரோ யாருக்கோ தந்த விருதுகளை வைத்தா? தரமிடுவது. சொல்லும் விசயத்தில் தரம் வேண்டுமா? கையாலும் வார்த்தையிலா?. என்னொவோ போங்கள்....இவர்களும்தான் பாசிசம் செய்கிறார்கள். கவிஞர். துவாரகாசாமிநாதன்.

மலடான கன்னிகளும் மற்றும் கடவுள்களும்...


உனக்கு அடிமையாகி நான் பூரணத்துவமடைவதை விட உன்னை விட்டு விலகி வெளியிலியிருந்து நான் முழுமையடைய விரும்புகிறேன். இயங்கும் பொருளே அழிக்கும் பொருளாகவும் இருக்கும் உண்மையை உணர்ந்த பின் இயங்காத உன்னை அழித்துவிட விரும்புகிறேன் பாறையில் படிந்த பாசியாய் நீ என்னுள் படிந்து என் சுயத்தையும் மறைத்துக் கொண்டு என்னை விட்டு போக மறுக்கிறாய். விடுதலையடையத் துடிக்கும் இதயத்திலிருந்து வலியும் இரத்தத்தில் அன்பும் கலந்துவிட்டால் உலக துன்பங்களனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும் ஆனால் என் மரணத்தின் பயத்தில் கூட நீதான் ஒளிந்திருக்கிறாய் உனை மரணிக்கச் செய்யும் வல்லமையை இன்னும் உலகம் பெறவில்லை உனை நம்பாததை விட நம்பித்தான் உன்னை அவமதிப்புக்குள்ளாக்குகிறேன் எல்லோரையும் போல.... உனை விட்டு விலகாதிருக்க மதம் ஏற்படுத்திய நுண்ணிய பயம்தான் என் செல்களை அரித்துக்கொண்டிருக்கிறது நிறைய நேரம் உயிர் பிசைந்து துன்ப்த்தில் அழுகிறேன். என்னுள் இருளைப் போர்த்துவது நீதானென வழிப்போக்கர்கள் சொல்லிவிட்டு போகிருக்கிறார்கள். ஆனால் நான் ஒளி பெறுவதற்கான ஆற்றல் எனக்கு வெளியில்லையென்பது மட்டும் புரிந்தாலும் இறுதியாக எனக்கான எல்லா தேடல்களுக்கும் விடை என்னுள்ளேயே கிடைத்துவிட்டன உனை விலகியதும்..... துவாரகாசாமிநாதன் - 9629272185

அந்த சிகப்பு பலூன்


எப்போது வெடித்துச் சிதறுமென தெரியாது முக்கி ஊதுகிறேன் பெரிதாகி சுருங்கும் கால இடைவெளியில் பலூன் விற்பவரின் உயிர் மூச்சுதான் இதய வடிவில்இ சிகப்பு நிறத்தில் பல நூற்றாண்டுகளாய் குழந்தைகளை குதூகலப் ப்டுத்துகிறதென்பதை அறியாது காள(ல)னின் கை வண்ணத்தில் உப்பை பலூன் மீது வீசுகிறோம் உயிர் பிரிந்த பலூன்கள் சிதலமடைந்து தொங்கின்றன. அந்த சிகப்பு பலூன் மட்டும் காற்றில் அங்குமிங்கும் அலைகிறது. ஏதோவொரு காரணத்தால் கையிலிருந்த பலூன் திடீரென வெடித்துச் சிதறியதைக் கண்டு திக்கித்து நிற்கும் குழந்தை போல அவர்களின் வாழ்க்கைத் துன்பங்கள் திருவிழாக்களில் ஓரமாய் கடை விரித்தே நிற்கின்றன. அவர்களுக்கு எந்த வண்ண பலூனும் நிறைவைத் தந்ததில்லை ஆனால் அந்த சிகப்பு பலூனிற்கு மட்டும் இதயத்தின் ஓரத்தில் இடம் தந்து விட்டார்கள் பின் தொடர்கிறது பலூன் வாழ்க்கையை எப்போது வெடித்துச் சிதறுமென தெரியாது பயணிக்கிறார்கள் பலூனுடன் அவர்களும்; நாமும்தான் அதன் வண்ணம்தான் மேலே பறக்கச் செய்கிறது என்று நினைந்து சிகப்பு பலூனை எல்லோரும் விரும்புகிறார்கள் விருப்பத்தினை யார் தடுக்க முடியும். எப்போது சுருங்கிவிடுமென யாருக்கும் தெரியாது ஆனாலும் முக்கி ஊதுகிறேன் நானும். அந்த சிகப்பு பலூனில்தான் எல்லோரது உயிர் மூச்சும் அடங்கியிருப்பதாக நினைந்து அந்த சிகப்பு பலூனை எப்போது வெடித்துச் சிதறுமெனத் தெரியாது ஊதுகிறேன்...... ஊதுவேன்...... ஊதுவார்கள் பெரிதாகி சுருங்குகிறது கால இடைவெளியில் அந்த சிகப்பு பலூனிற்கு மட்டும் இதயத்தின் ஓரத்தில்லை முழுவதும் இடம் தந்து விட்டோம் எப்போது வெடித்துச் சிதறுமெனத் தெரியாது... ஆனாலொன்று அதற்கு மட்டும் அழிவே இருக்காது....... அதை அழிக்கவும் முடியாது... அது எங்கள் உயிர்மூச்சில் கலந்தால்.... துவாரகாசாமி நாதன் 9629272185 Previous Next

முட்டத்தட்டு எங்கப்பன் தட்டு


'அப்பன் தட்டை எடுத்து போடா' ஆத்தா சொல்லிச்சு தட்டுக்கு நான் போட்ட சண்டையெலாம் நினைவுக்கு வந்துச்சு அண்ணமாரு சாப்பிட்ட அதே தட்டுதான் முட்ட வடிவ தட்டுக்கு குட்டு வாங்கி அழுத ஞாபகம் வந்துச்சு தாய் மாமன் பேரு வடிச்சிருக்கும் எத்தன காலமது பரணியில கிடந்துச்சு அப்பன் போன கவலயெல்லாம் ஆத்தா கண்ணீரா அந்த தட்டில் வடிச்சிருப்பா... அண்ணமாரு சாப்பிட்டது அவுகளும் இப்போ அக்கர சீமையில அப்போ படிக்க 'ஆஸ்டலுக்கு' போனயென்ன ஆத்தா சொன்னிச்சு "அப்பன் தட்ட எடுத்துப் போடா' தட்டுக்குச் சண்டயிட்ட நாங்க சொத்துக்கும் சண்டையிட்டு தனியாக போறப்ப ஆத்தா சொன்னிச்சு "அப்பன் தட்ட எடுத்துப் போடா' மோர் பிசைந்து சாப்பிட்டப்ப அப்பன் சாப்பிட்ட அலகயும் ஆத்தா நெனவயும் அந்த தட்டு காட்டிச்சி.. அப்பன் ஆத்தா கூடயில்லஇ தட்டுமட்டுமிருக்கு தட்டுல ஒன்னுமில்ல உசிருல நெனவிருக்க கன்னுக்குள்ள அப்பன் முகம் தட்டுலயும் தெரிஞ்சிச்சு எம்புள்ள சாப்பிட எடுத்து வைக்க ஆசப்பட்டன் எம்புள்ள சாப்டும்போது எம்மொகம் வருமான்னு தெரியிலயே எத்தன நா இச்சோகம் இருக்குமுன்னு அறியலயே நெனவ வச்சு உசிர ஏம்படச்சான் அப்பன் சோறூட்ட அதே தட்டுல சாப்பிடுறா எம்மக இப்போ தட்டுல உப்பா எங்கண்ணீரு.....