புதன், 1 மே, 2019

அறிவை அறி அதுவே அறம்

*அறியாமை*

அறிவை அறியாதிருப்பது. அறிந்தாலும் தெளிவில்லாதிருப்பது. அச்சப் படுவது. அறிவுத் திடமின்றிருப்பது. அறிந்ததை சொல்லிக் கொடுக்க தெரியாமலிருப்பதும் அறியாமையே. அறிவு வளம் குன்றி இருப்பதும் காரணமாகிறது அறியாமைக்கு.

*அறிவின் நோக்கம்*

ஆறாவது அறிவின் நோக்கமென்ன என உணராதும் அறியாமலும் இருப்பதே உலகத்தின் அனைத்து துன்பங்களுக்கும். சிக்கலுக்கும் காரணம். மனித அறிவு அந்த மயக்கத்திலிருந்து தெளிந்து பேரறிவின் பூரணத்தையும் இயற்கையறிவின் செயலின் விளைவையும் உணர்ந்து, எண்ணத்தூய்மை, வினைத்தூய்மை, கருமையத்தூய்மை பெற்று, பாவப்பதிவையும் கலங்கங்களையும் நீக்கி இறையுணர்வு பெறுவதே வாழ்வில் ஆறாவது அறிவுன் நோக்கம்.

*அறிவு வளம்*

இவ்வாறாக ஆறாவது அறிவை இயற்கை அறிவோடு இணைந்து ஒத்து வாழச் செய்யும் உள் உணர்வு கல்வியை உலகம் முழுதும் பெருக்குவதும். அதற்கான புத்தகங்களை நல்ல தெளிந்த விளக்கங்களுடன் எழுதுதல் வேண்டும்.

*அறிவுத் திடம்*

பாதையை, வாழ்வின் பாதையை மாற்றாது, நோக்கம் மறக்காது அறிவின் நுட்பத்தை பெருக்கி கலங்கங்கள், மயக்கங்கள், சிக்கல்கள், பாவப்பதிவுகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட செயலின் விளைவை உணர்ந்து அயரா விழிப்புடன் பழக்கத்தை மாற்றியமைத்து உறுதியுடன் வாழ்வின் நோக்கத்தின் பாதையில் திடமுடன் பயணிப்பது. பாதை மாறினால் அறிவுக்கு திரும்ப திரும்ப உறுத்துவது அதுவே அறிவுறுத்தல் என்று சொல்கிறோம். தெளிவு, துணிவு, செயலொழுக்கம் என்ற பாதையை விளக்கத்தின் வழி அமைப்பதே அறிவுத் திடம்படுதல் ஆகும்.

*அறிவுத் தெளிவு*
திரும்ப திரும்ப புலன்வழியும் தன்முனைப்பிலும் பழக்கத்தின் வழி செல்லும் மனதை தெளிவுறச் செய்தல் வேண்டும். ஐயமின்றி கற்றல். அடிப்படையில் தெளிவு. குழப்பமின்றி செயல் செய்யல் வேண்டும்.

*அறிவுத் துணிவு*
ஒரு புதிய பாதையை திட்டமிட்டுள்ளோம் அதுவே மனவளக்கலை என்னும் பாதை. அப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும் பேரார்வத்தை வளர்த்து. இவை நமக்காக மட்டுமே நாம் செய்யவில்லை இவ்வுலகம் முழுதும் உன்னதமடைய நாமும் உன்னதம் அடையச் செய்கிறோம் என்ற துணிவுடன் செயலாற்ற வேண்டும். இது இறைப் பணி யாராலும் தடுக்க முடியாது. அதுபோல நமக்கு இயற்கை தரும் எதனையும் யாரும் தடுத்து விட முடியாது. அது வந்தே தீரும். நாமே நமக்கு தடையாக அமைந்து விடக்கூடாது. இதுதான் வேண்டும், இப்படித்தான் வேண்டும், இவ்வளவு வேண்டும் இந்த நேரத்தில் வேண்டும் என்றெல்லாம் தன்முனைப்பால் நாமே நமக்குள் சிக்கலை உண்டாக்கி விடுகிறோம். இயற்கை நியதி மாறாதது. ஆதலால் தொடர்ந்து பயிற்சி செய்தும் பிறருக்கு சொல்லிக் கொடுத்தும் வந்தால் தன்னால் எல்லா மாற்றமும் இயற்கையே தரும்.

*அறிவை அறி அதுவே அறம்*
அறிவை அறிவால் அறிவதே அறம். அறச் செயலை தொடர பழக வேண்டும். மனதை அறிவுக்குள் புகுத்துவதே திடமான, வலிமையான செயல். மனம் புலன் வழி ஓடியே பலகீனப் பட்டுக் கிடக்கு. வலிந்து நல் பழக்கத்தை பழக வேண்டும் அதற்கு தொடர் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சிதான் தங்களுக்கு திடம் உறுதி, நுட்பம், வலிமை, தெளி, துணிவு என எல்லாவற்றையும் தரும். பயிற்சி செய்யாது வேறு வழியே இல்லை உய்வுற, முழுமைப் பேறு பெற பழகுவோம் சிற்றறிவை பேரறிவோடு இணைக்கும் உன்னத பணியை தொடர்ந்து செய்வோம் வாருங்கள். அதுவே அறச் செயல்.

வாழ்க வளமுடன்
*பேரா.ச.சாமிநாதன்*
*தஞ்சாவூர்*

எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு


எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு விஞ்ஞான மெய்ஞானப் பார்வை,

       எண்ணத்தில் ஒழுங்கு எங்கும்         ஒழுங்கே 
          
 முதல் கோணல் முற்றிலும் கோணல் எனபது போலவே எண்ணத்தில் முதலில் விசம் கலந்தால் முழுதும் மனம் கெட்டு விடும். எண்ணத்தில் ஒழுங்கு, பேச்சில் சொல்லில் ஒழுங்கை கொண்டு வரும். வாக்கினில் ஒழுங்கு வந்தால் செயலிலும் மன எழுச்சியிலும் ஒழுங்கு வரும் என்பதை ஜான். சி. மேக்ஸ்வெல் என்பவர் குழு பற்றிய தனது புத்தகத்தில் சொல்லி வரிசை படுத்துகிறார். மேலும் அதில் சொல்கிறார் ஒழுங்கு என்பது நீங்கள் உண்மையிலேயே செய்ய விரும்புவதைச் செய்வதற்காக, நீங்கள் உண்மையிலேயே விரும்பாதவற்றைச் செய்வது. அதாவது அற்ப ஆசையான, விருப்பமான, கோக்குமாக்கான, தவறான, சீர்கேடான, துன்பமளிக்கும் எண்ணத்தை கை விடுதல். இதே போல் வேதாத்ரியும் ஒழுக்கத்தின் சாம்யமாக சொல்கிறார். ஒழுக்கம் என்பது தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, உயிருக்கோ துன்பமளிக்காமல் இருப்பதுதான். இது முதலில் எண்ணத்திலிருந்தே தொடங்க வேண்டும். எண்ணத்தால் யாருக்கும் துன்பம் அளிக்காமலும் துன்படுவருக்கு உதவி செய்வதாகவும் இருக்க வேண்டும்.  

• சிந்தனையில் ஒழுங்கு
          தன்னொழுக்கம் இல்லாது தறிக்கெட்டு ஓடும் மனதை நேர்ப்படுத்துவதே ஒழுங்கு. வைராக்கியத்துடன், சமூக பொறுப்புடன், கொள்கைகளுடன் நீ உனது எண்ணத்தை, சிந்தனையை ஒழுங்கு செய்ய வேண்டும். காட்டாற்று வெள்ளம் போல் எண்ணத்தை ஓட விடக் கூடாது அதனை சீர் செய்ய வேண்டியதே ஒழுங்கு அது ஆற்றின் பாதையை சரி செய்து, அணைக் கட்டி வெள்ளத்தை விவசாயத்திற்கு பயன் தருவது போல் எண்ணத்தை, சிந்தனையை ஒழுங்கு செய்யும் போது அது உனக்கும் உன்னைச் சேர்ந்தாருக்கும் பயன் தரும், சமூகம் செழிப்படையும். தினமும் உன் எண்ணத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே இரு, ஓயாதே எங்கே உனது இலட்சியத்திலிருந்து, குறிக்கோளிலிருந்து, பாதையிலிருந்து விலகுகிறாய் என பார்த்துக் கொண்டே இரு. எந்த நேரத்தில் ஒரு எண்ணம் தோன்றி உன்னை துன்பத்திற்கு உள்ளாக்கும் செயலை செய்யச் சொல்லி தூண்டுகிறதென கவனி, எண்ணத்தை கவனிப்பதே ஒரு சுகம்தான் உன்னைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ளலாம். அதனை கண்டு மிரளாதே, சலிப்படையாதே, வெறுப்படையாதே கவனி கவனி கவனித்து சீர் செய்யப்பார். தினமும் ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பாக தொடர்ந்து வரும் எண்ணங்களை, சிந்தனைகளை எழுதிக் கொண்டே வா, ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம் எழுதிக்கொண்டே வா. எந்த சிந்தனை எந்த எண்ணங்களால் தவறு செய்தாய், சிக்கலுற்றாய் என பார். தொடர்ந்து இவ்வாறு செய்து வர உன் சிந்தனையில் ஒழுங்கு கிடைப்பதை நீயே காண்பாய். மகிழ்ச்சியடைவாய். செய்து பார். சவாலான நேரங்களில் என்ன முடிவெடுத்தாய், எப்படி முடிவெடுத்தாய் என யோசி, எப்பொழுதெல்லாம் கூத்தடிக்கும், களியாட்ட, கெளித்தல் எண்ணங்கள் தோன்றுகின்றன என விழிப்பாய் இரு. ஒரு நாளைக்கு எத்தனை முறை பொய் சொல்கிறாய், பேராசையில், காமத்தில், பொறாமையில், காழ்ப்புண்ர்ச்சியில், கேடு கெட்ட விதமாக எண்ணங்கள் ஓடுகின்றன என கவனித்துக் கொண்டே தேவையில்லாமல் வரும் கற்பனையான, செயல் படுத்த முடியாத, செயல் படுத்த முடியாத எண்ணங்களை சீர் செய்ய வேண்டிய உறுதியுடன் இரு. மூளையை வெறும் 17விழுக்காடு சிந்திக்க பயன் படுத்தியவர்கள்தான் விஞ்ஞானிகள். அது போல் தினமும், வாரத்தில் மூன்று, நான்கு முறை மூளையை பயன் படுத்தி சிந்தித்த ஒருவன் மிகப்பெரிய வெற்றியாளனாக மாறுகிறான் என்று பெர்னாஷா சொல்கிறார். தினமும் அரை மணி நேரம் வாசிப்பவர்களுக்கு மூளை நன்றாக சிந்திக்க உதவும். நல்ல புத்தங்களை தெரிவு செய்து வாசிப்பை தொடரும் ஒருவருக்கு வாழ்க்கை செம்மையாவத்ற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் அந்த புத்தகமே சொல்லிக் கொடுக்கும். அதனால் சிந்தனையில் ஒழுங்கு வர வாசிக்க தொடர்.சிந்தனை மாற்றமே எல்லாவற்றின் மாற்றத்திற்கும் அடிகோளும்.

 • உணர்ச்சியில் ஒழுங்கு 

               மனதில் எழும் உணர்ச்சிகளை உன்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அதை விட்டு விட்டு அந்த உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நீ செயல்பட்டால் நீ அந்த உணர்ச்சிகளுக்கு நல்ல அடிமையாகி விடுவாய். மனதில் எழும் உணர்ச்சிகளை மொத்தம் 58 என கணக்கிட்டுள்ளனர், அதில் தீயனவற்றை ஆறு வகை படுத்தியுள்ளனர். பேராசை, சினம், கவலை, கடும் பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால் கவர்ச்சி. இங்கே மனதில் எழும் உணர்வுகளை அது தரும் மனப்பாங்கையும், அந்த உணர்வுகளோ, உணர்ச்சிகளோ ஏற்படும் போது உடலில் என்ன வகையான மாற்றம் நிகழ்கிறதென நன்றாக கவனித்தாலே எது வேண்டும் எது வேண்டாம் என ஒழுங்கு செய்ய முடியும். உணர்ச்சிகளின் தொகுப்புதான் மனித மனம் அதில் எப்போது என்ன அலைச்சுழல் ஏற்படுகிறதோ அதைப் பொருத்து உடலிலோ, மனதிலோ, மூளையிலோ ஒரு வகையான பொருந்தாவுணர்வு எழுந்தால் அது வேண்டாமென முடிவெடுக்க வேண்டியதுதான். மகிழ்வும் பொருந்திப் போகும் உணர்வும் எப்போதும் அமைதி தரக் கூடிய மன எழுச்சிகளை உனக்கோ, பிறருக்கோ துன்பமளிக்காத உணர்ச்சிகளை ஏற்று செயல் பட வேண்டும். உனது இலட்சியத்தையோ, உனக்கு தேவையானவற்றைச் செய்ய விடாது தடுக்கும் உணர்ச்சிகளையும், உன்னை அடிமைப் படுத்தும் உணர்ச்சிகளையும், உனது பாதையின் போக்கை தவறாக மாற்றக் கூடிய உணர்ச்சிகளையும் நீயே கண்டறிந்து நிறுத்த வேண்டும். உணர்ச்சிகளை மனதொடு போட்டு மல்லுக்கட்டி சிக்கலுக்கு உள்ளாக்க கூடாது. மனதையே சாட்சியாகவும், மனதையே நீதிபதியாகவும் வைத்து உனது மனதில் எழும் உணர்ச்சியலைகளை ஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டுமென வேதாத்ரி சொல்கிறார். உணர்ச்சியால் சிக்கலுக்குள்ளான காலங்களையும் மனிதர்களையும் அதன் விளைவுகளையும் நினைத்து பார். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி வாழ்வில் வெற்றிக் கண்டவர்களையும் நினைத்துப் பார். உன் மனம் தேங்காய் போன்றது எது வேண்டுமுனக்கு இனிக்கும் தண்ணீரா?, இல்லை தேங்காய்த்துருவலா? இல்லை அதன் ஓடா? தேங்காய் மட்டையா? உன் மனதில் எழும் தேவையற்ற, உன் நல்ல செயலை தடுக்கும் உண்ர்ச்சிகள் தேங்காய் ஓட்டையும் மட்டையையும் போன்றதே நீயே முடிவு செய்.

 • செயலில் ஒழுங்கு 
            
              செயலே உனது முகத்தைக் காட்டும் கண்ணாடி. சின்ன சின்ன செயல்களில் ஒரு மனிதனை மிக எளிமையாக எடை போட்டு விடலாம். முன்பு சொன்ன அதே மேக்ஸ்வெல் சொல்கிறார் ஒழுங்கு என்பது சரியானவற்றை சரியான நேரத்தில் சரியான காரணத்திற்காக செய்வதே ஆகும். உன் ஒவ்வொரு செயலிலும் நீ ஒரு ஒழுங்கை கடைப் பிடிக்க வேண்டும். உனது கண்ணாடி மேசை, நீ படிக்கும் இடம், உனத் எழுதும் நோட்டு, புத்தக அறை, படுக்கும் அறை இன்னும் நன்றாக சொல்ல வேண்டுமானால் உனது கழிவறையை நீ எவ்வாறாக பராமறிக்கிறாயோ அவ்வாறே உனது செயலொழுங்கு அமையும். நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியுடன் செய்ய பழக வேண்டும்.சவாலான செயல்களையும் மிக நிதானமாக செய்ய பழகிக் கொள். உனது உணவு நேரத்தை ஒரே மாதிரி குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழகு, நீ தொடர்ந்து தினமும் செய்யும் சில செயல்களை எதற்காகவும் மாற்றிக் கொள்ளாமல் அதனை சரிவர கடைப் பிடி, அதில் சில கொள்கைகளை வைத்துக் கொள். உதாரணமாக சரியாக காலை 8 மணிக்கு காலை உணவு எடுத்துக் கொள்வதை கடைப் பிடிப்பது, காலையில் எழுவதை தினமும் ஒரே மாதிரி செய் அதாவது காலை 5 மணிக்கு முன் எழுந்து பழகு. நான் எனது வாழ்வில் ஒரு பெண்மணியை சந்தித்தேன் பிரான்ஸ் நாட்டிலிருந்து சரியாக கிறிஸ்மஸ்துக்கு வந்து இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு உதவுவார் இது ஒரு வகையான நல்ல செயலாக, கடமையாக இருப்பார். எனது அப்பா டீக்கடை வைத்துதான் எங்களை நான்கு பேரை டிகிரி வரை படிக்க வைத்தார் சரியாக மாலை 3 மணிக்கு தின்மணி படிக்க ஆரம்பித்தால் ஒரு மணி னேரம் அந்த பேப்பரின் முழுதையும் படிக்காமல் வைக்க மாட்டார். அது போல் நீ செய்யும் செயலை கடமையாக செய்து அச்செயலின் பயனால் இப்பூவுலகம் நன்மை பெற உள்ளதென்ற நினைவிலும் பொறுப்புடனுமே செயலாற்ற வேண்டும். உனது ஒவ்வொரு செயலையும் உனது இலட்சியத்துடன் இணைத்து மாறாது கொள்கை பிடிப்புடன், வைராக்கியத்துடன் தொடர்ந்து செய்யும் போது அதற்கான பயனை, விளைவை, புகழை, உயரத்தை நீ அடைவாய். மறவாதே செயலே உனது முகத்தை அகத்தை காட்டும் கண்ணாடி. விழிப்பு நிலை தவறாது நீ பாதை மாறாமல் இந்த சமூகத்திற்கு பயன் தரும் செயலை மட்டுமே செய்வேன் எனௌறுதியும் நுட்பத்துடனேயே செயலாற்ற வேண்டும்.

 • பழக்கத்தில் ஒழுங்கு 

              தொடர் செயலே பழக்கமாகி, வழக்கமாகி, பண்பாடாகி, ஆளுமைத்திறனாக மாறுகிறது. எண்ணம், சொல், செயல், மன உணர்ச்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு வித நல்ல பழக்கங்களை வலிந்துதான் பழகிக் கொள்ள வேண்டும் இந்த உலகத்தில் நல்லவனாயிருக்கத்தான் வலிமை வேண்டும். மன்ம் பலகீனப் பட்டிருந்தால் உன் செயலின் விளைவாக சீக்கிரமே மரணம் வந்து விடும் அதனால் உனக்கோ, உனது குடும்பத்துக்கோ, இந்த சமுதாயத்திற்கோ நிச்சயமாக பலனில்லை. நீயே யோசித்துப் பார், கேடு செய்தவர்களின், எல்லோருக்கும் தெரிந்தோ, தெரியாமேலோ தவறான பழக்கத்தை வைத்திருந்தவர்களின் இன்றைய நிலையென்ன. கணக்கிட்டு பார் யாரால் இந்த உலகிற்கு நன்மை, எப்பழக்கம் எல்லோரையும் வாழ வைத்துள்ளதென. எண்ணம், உணவு, உறக்கம், உழைப்பு, உடை, ஓய்வு, சிந்தனை, புத்தக வாசிப்பு, இசை, நல்லோர் உரை கேட்டல், பெரியோருக்கு குழந்தகளுக்கு உதவுதல் என சிலவற்றை தொடர்ந்து பழகுதல் நன்று. சிலவற்றில் அளவு முறை பேணுதல் அவசியம் என்கிறார் வேதாத்ரி. உனக்கும் பிறருக்கும் மகிழ்வு தரும் நல்ல பழக்கங்களை ஒழுங்குடனும் நேர்த்தியுடன் செய்தல் நன்று. எண்ணமே வேர் பிடித்து சொல்லாகி, செயலாகி, மன எழுச்சியாகி, உணர்ச்சியாகி, செயலாகி பழக்கமாகி நல் விருட்சமாகி நிழல் தரும் உணர். Dr.S.Saminathan