மூலதனமெனில் பூமி, ஆ யுதங்கள்,
முற்கால அனுபவங்கள், திறமை ஆகும்
மூலதனம் தனிமனிதன் உரிமை யானால்
முயற்சி இன்றிப் பிறருழைப்பைக் கவர நேரும்
மூலதனம் சமுதாய உரிமை யாக
முழுவதுமே மதித்திடுதல் சமதர் மம் ஆம்
மூலதனம் பணத்தாலே மதிக்கும் போக்கால்
முடிவில்லாத் துன்பங்கள் வாழ்வில் கண்டோம்.
பொருள் துறைக்கு ஆதார சாதனங்கள்
புவிமீது பணமுடையோர்க்கு உரிமை யாச்சு;
பொருள்தோற்றம் செல்வந்தர் வணிகர் என்போர்
பொறுப்பினிலே வந்ததுபின் உழைப்போர் கட்கு
பொருள்தோற்ற மூலதனம் கிட்ட வில்லை
பொருளுடையோர்க்கு அடிமைசெய்து கூலி பெற்றார்;
பொருள்தோற்ற விற்க சுதந்திரம் இல்லாமல்
பொதுவாக உழைப்பாளர் நலிந்து விட்டார்.
தத்துவஞானி யோகிராஜ் வேதாத்ரி
மூல தனம் என்பது எவ்வளவு விளைவுகளை ஏறபடுத்தும் என்ற உண்மைதனை 50 வருடத்திற்கும் முன்பே ஆராய்ச்சி செய்து ஒருவர் எப்படி மார்க்சிய கருத்துக்களை எல்லோருக்கும் தெளிவாக புரியும் படி எழுதியிருப்பது ஒரு ஆன்மீக மகான் என்பதே இங்கு குறிப்பிடப்படவேண்டியது. அந்த மகான் என் வாழ்வையும் சிறிது பாதித்துள்ளார். அவரே வேதாத்ரி மகரிசி.
துவாரகாசாமிநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக