சனி, 1 நவம்பர், 2014

எனக்கு கிடைத்த குருவினைப் பற்றி........

எனக்கு கிடைத்த குருவினைப் பற்றி........ நான் சிறிய வயதில் விவேகனந்தரை அவரது புத்தகத்தை குருவாக நினைந்து படித்தும் வணங்கியும் வந்தேன். அதன் பின் ஏசு நாதரை வணங்கினேன். அவர் வாசங்களை நான் பின் தொடர்ந்தேன். 1995 பத்தாவது மாதம் எனக்கு வேதாத்ரி கிடைத்தார் அதன் பின் தான் என் வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்தது, நான் 12ம் வகுப்பு தவறியிருந்தேன், தேறினேன். தொடர்ச்சியாக தவறான நண்பர்களால் வழி நடத்தப்பட்டு ஜெயிலுக்கும் சென்று வந்தேன். அத்தவறுகளை உணர்ந்தேன். இராச இராச சோழன் என்பவரை சந்தித்தேன் அவர்தான் எனக்கு காந்தியைப் பற்றி விரிவான விவாதம் நடத்த அனுமதி தந்து காந்தியின் அஹிம்சையை பின்பற்ற செய்தார். காமம் பற்றிய விரிவான கருத்துக்களை ஒசோவிடம் கற்றேன். அதை தொடர்ந்து வேதாத்ரிய சிந்தனைகளை ஆர்.வி.கணேசனிடம் நிறைய கேள்விகள் கேட்டு விவாதம் செய்தேன் குருவயே குறை கூறினேன். ஆனாலும் அவரையே பின் பற்றினேன். இப்படி நிறைய குருக்கள் எனக்கு கிடைத்தாலும். தற்போது கிடைத்த இருவர்தான் என்னை தெளிவான பாதையில் பயணிக்க செய்துள்ளர்கள்.. அவரில் ஒருவர் செசி அமைப்பு செயலாள்ர் திரு செயபிரகாசம், அவர் பாதையும் காந்திய பார்வைதான் மேலும் அமைதி, எளிமை, செயலின் முன்னுதாரன புருசர். அனுபூதியான ஞான பெட்டகம். அவர் ஒரு அறிவுக்களஞ்சியம், அறிவு ஜீவி. அவர் மாயா அன்னையைப் பற்றி சொல்லும் விதம், காந்தியைப் பற்றி பார்க்கும் கோணம் நம்மை திருத்தியமைக்கும். நம் வாழ்வின் பணியை உணர்த்தும். மதுரையில் வாழ்ந்து நிறைய பேரை வாழ்விலிருந்து பெருவாழ்விற்கு கொண்டு செல்லுகிறார். என்னையும் அப்படிதான் செய்தார். இரண்டாமவர் புதுக்கோட்டையில் இஞ்னியருக்கு படித்துவிட்டு விவசாயம் பண்ணிக்கொண்டு நிறைய பேரை வாழ வைத்துக் கொண்டுள்ளார். அவர்தான் முத்துகுமரேசன் அய்யா. எனது தற்போதய குரு என்னை செதுக்கும் சிற்பி, என் வாழ்வை செப்பணிடும் விவசாயி. மண்ணை செப்பணிடுவது போல். தன் வீட்டிலேயே தவ மையம் வைத்துக்கொண்டு அதை ஒரு பன் முக பல்கலைக்கூடமாக வைத்து பல வருடமாக நடத்தி வருகிறார். இவரின் ஆன்மீக மக்களின் சேவை மட்டுமே. குறையுடைய ஆன்மீகவதிகளை உலுக்கி எடுப்பார். அரைகுறைகளை தட்டி விடுவார். பயம் கொள்ளார். எங்களை போன்றோருக்கு வழி காட்டியாகவும், ஒரு லிடராகவும். பணிவு சொல்லி தரும் பண்பாளராகவும் இருக்கிறார். சிலர் மிளகாயை வடையில் போட்டு வேக வைப்பார்கள் காரம் கம்மியாகத்தான் இருக்கும், ஆனால் அதையே அடுப்பில், நெருப்பில் போட்டால் என்னாகும் பாருங்கள். அந்த வேலைத்தான் இந்த இருவரும் செய்கிறார்கள். எங்களை போன்றோரைப் பிடித்து நெருப்பில் போட்டு காரத்தை ஆன்மாவில் கூட்டுகிறார்கள். அது போல நிறை குடம் தழும்பாது என்பார்கள். ஓட்டை குடமும் தழும்பாது என்பதை புரிந்து கொண்டு இதுபோல நல்ல குருவினை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள். உங்கள் குரு நிறை குடமா? ஓட்டை குடமுமா? என்பதை உணருங்கள். அவர்களை நிறைய பரிசோதனை செய்யுங்கள் அதற்கு அனுமதி தருகிறார்களா? என்று பாருங்கள். ஒரு நல்ல குரு தன்னை மறைத்துக்கொண்டு மாணவரை முன்னிருத்துகிறார். நன்றி வாழ்க வளமுடன்... துவாரகா சாமி நாதன் 9629272185

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக