சனி, 8 பிப்ரவரி, 2014

திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை

திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை

எந்த குறுக்கீடுகளுமில்லாமல்
எனது ஆன்மாவை 
மீட்டுகின்றன மரங்கள்....!
தனிமையில் 
எனது உணர்வு நரம்புகள் 
அறுந்து விழுகின்றன...!

நான் திரும்பவும் 
நேசிக்கிறேன் 
மரணத்தையும்
தனிமையும் 
நம் வாழ்வையும்....!

எனது ஆன்மா 
கண்ணாடித்துகல்களாய்....!
உடைந்து நொறுங்கி 
விழுகிறது 
ஒரே நிசப்தம்...!

கடைசியாய் ஒன்று 
நீதானே 
எனது புதிய சொர்க்கத்தை 
கண்டு கொடுத்தாய்

மெதுவாக மூழ்குகிறேன்....! 
உன்னில் நான். 

துவாரகா சாமிநாதன் 
9629272185

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக