நரகத்தின்
வாயிலிலிருந்து
நான் ஏன் அப்படி
செய்தேன்?
என்னுள்
அது எப்படி நிகழ் ந்தது?
யாவரும்
அடக்கி வைத்த காமத்தை
என்னுள்
புதைத்து விட்டார்களோ?
மனித காமத்தின் மொத்த வடிகாலாய்
நான் மாறி விட்டேனா?
புராதன
நகரத்தில் பிறந்த நானா அப்படி
செய்தேன்?
அ ந் நகரத்தின் இசை
கேட்காமல் இப்படி ஆகி விட்டேனொ?
எந்த பழத்தை தின்றதற்காக
எனக்கு
இந்த தண்டனை...
யோனிகளில்
வேறுபாடு பார்க்காமல் விட்டுவிட்டேனா?
மனித ஆன்மாவில் இன்னும் மிருகம் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு
உதாரணமாகி விட்டேனா?
அய்யகோ!
பாதகி....எனக்கு மகளாய் வந்து
பிற ந்தாளே!
மகளே ஆயிசா என்னை மன்னித்து
விடு....
சட்டங்களை
விட மன்னிப்புதான் மாற்றம் தரும்.
எந்த கடவுளாவது இந்த திருவிளையாடலை நடத்தியதற்கு
பொறுப்பேற்றுக் கொள்ளுமா?
விதியே!
எந்த நேரத்தில் எனை கருவுற்றாய்
ஊடகத்தில்
தங்கமீன்களை பார்க்காமல்
தகாதவற்றை
பார்த்து தொலைத்தேனே...
இந்த சமூகத்தின் இழிவான பார்வை என்
மகள் பெற்ற மகவுகளின் மேல்
விழாமல் மறைத்து வையுங்கள் இந்த
கவிதையை
எந்த முறையிலும் ஆவணப்படுத்தாதீர்..
நானே கடைசியாய்
நரகத்தின் வாயிலில்
இனி இந்த உடலும் இந்த
பிறப்பும் வேண்டாம்
காசிக்கு
போவதற்குள்
இங்கேயே
பிணமாய்
உலகத்தின்
ஒட்டு மொத்த அழுத்தத்தால்....
துவாரகாசாமி
நாதன்
9629272185
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக