இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
எதைக்கொண்டும்
நிரப்பி விட முடிவதில்லை
எனது வெற்றிடத்தை...!
வியர்த்து வெளியேறுகிறது
எனது வெறுமை....!
கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய்
தொங்கி கொண்டிருக்கிறேன்
அதன் விளிம்பில்....!
கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன்
எனது வெற்றிடத்தை...!
வெறுமை
எல்லா உணர்வுகளின்
கலவையாக வெறுமை
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.
கிளைகளில்லா மரம் போல
மரத்துப்போகிறது மனம்
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன
ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம்
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில்
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!
வெற்றிடம்
தோன்றி மறைகிறது
இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன
கவிதையால்.....!
துவராகா சாமிநாதன்
9629272185
எதைக்கொண்டும்
நிரப்பி விட முடிவதில்லை
எனது வெற்றிடத்தை...!
வியர்த்து வெளியேறுகிறது
எனது வெறுமை....!
கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய்
தொங்கி கொண்டிருக்கிறேன்
அதன் விளிம்பில்....!
கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன்
எனது வெற்றிடத்தை...!
வெறுமை
எல்லா உணர்வுகளின்
கலவையாக வெறுமை
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.
கிளைகளில்லா மரம் போல
மரத்துப்போகிறது மனம்
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன
ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம்
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில்
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!
வெற்றிடம்
தோன்றி மறைகிறது
இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன
கவிதையால்.....!
துவராகா சாமிநாதன்
9629272185
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக