சனி, 8 பிப்ரவரி, 2014

என் கவிதைகள்

துன்பத்திலிருந்து
விடுதலை வேண்டி
கதறி அழுகிறேன் ....!
ஆழ்ந்த மவுனம்.
வீரிட்டு எழுகிறேன் பாதியில்
காமத்தின் உட்புகுந்து தேடுகிறேன்
என்னை ....!
உயிர் சிதறி
தெறித் தோடுகிறது பிரபஞ்சத்தில்
(ழி)(லி)யின்றி....!

அவள்  உடல் பியித்து போடுகிறாள்
எங்கும் நிலை கொள்ளாமல்
அலைகிறது மனம்
பிய்ந்து தொங்குகிறது கலையில் கொஞ்சம்.

உடல் சிராய்த்து சிவப்பில் தேடுகிறேன்
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.

நீரின்றி வாடுகிறது வேர்
மலர் இன்னும் மலரவில்லை....!

ஆணவப் பூச்சில் முகம் விகாரமானது
ஆழ உட்புகுந்து போய்க்கொண்டிருக்கிறேன்
இன்னும் தேடிய பாடில்லை...! இருத்தலை
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.

தற்செயலாய் பிரபஞ்ச நுனி எட்டிப்
பார்க்கிறது என்னுள் .....!
காலத்தின் வேகத்தினை  எட்டி
பிடிக்க முடியவில்லை
என்னை திறந்து மூடவே
நேரம் சரியாகிவிடுகிறது

திறந்து போடவா ? மூடவா? குழப்பத்தில் நான்!

கடைசியில் வாழ்வே மாயம்
கால வெளிதனில்
துன்பமும் இன்பமும்
திறந்து மூடுகிறது என் வாழ்வை..!

துவாரகா சாமிநாதன்
9629272185

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக