வியாழன், 15 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி அதுவே அறம்

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண்.

இக்குறளின் படி பார்த்தால் அறிவு நமது உள்ளத்துள் நின்று நமக்கு அரணாக நமது குற்றத்தை அழிவை தடுத்து காக்கும் கருவியாகும். அதன் படி பார்த்தால் நமக்குள் இருக்கும் மனசாட்சியே அறிவாக வந்து இடித்துரைக்கும் செயலை நாம் இங்கே நினைவு கூறலாம். மேலும் வள்ளுவரும் வேதாத்ரியும் நுண்மான்நுழைபுலன் அறிவு என்று ஒன்றைச் சொல்லி அது மிகவும் துல்லிய சமதளச் சீர்மையோடு இயங்குகிறதென்றும் விளக்குகிறார். ஒவ்வொன்றிலும் உள்ளிருந்து செயலுக்கு விளைவாக துல்லியமாகவும் சமதளத்தோடும் சீர்மையோடும் விளைவைத் தருகின்றது அறிவே. அவ்வறிவை மிக நுண்ணிய மன அலைச்சுழலில் நின்று கருத்துக்கிசைவாக்க வேண்டும். பழக்கத்தினால் உணரலாம். அவ்வியக்கத்தை பார்க்கவோ கருவியில் எட்டி விடவோ முடியாது. காலத்தினால் உணர்த்தப் பெறலாம். அவ்வறிவின் இயக்கத்தை அவ்வறிவைக் கொண்டே அறிதல் வேண்டும். நம்பிக்கை மட்டும் போதாது விளக்கம் பெற்று தெளிவாக உணர்ந்து முழுமையடைய வேண்டும்.

#அறிவைஅறி
#துவாரகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக