திங்கள், 19 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி அதுவே அறம்

ஞானம் வீட்டைக் கட்டும் மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும். அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.(20)

விவிலியம் நீதிமொழிகள் 24:20

அறிவை வளர்த்துக்கொள்வதென்பது மனதை அகலப்படுத்தும் வேலையே அறிவே மனதின் உள்ளத்தின் உயிரின் உடலின் மெய்ப்பொருளாக உட்பொருளாகயிருந்து செயல்படுகிறது
அறிவை வளர்ப்பதென்பது எழுத்தறிவு தொழிலறிவு பட்டறிவு மட்டுமல்லாது எல்லாவற்றிலும் அறிவாக இயங்கும் மெய்யறிவை உணர்வதே ஞானமென்கிறோம் அதுவே உனது மனதின் அறைகளை பல பொருட்களைக் கொண்டு நிரப்பும். பல வளங்களை கொண்டு வந்து சேர்க்கும். அவைகள் மனிதனை மனிதனாக நேசிக்கும் சுயமரியாதை சிந்தனையையும் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டி பொருட்களில் உயிர்களில் பேரறிவு இயங்கும் சமநிலையை புரிந்து கொண்டு   தன் தேவையுணர்ந்து பிறர் தேவையை குறிப்பறிந்து கூட்டி குறைத்து செயலாற்றும் சமூகத்தொண்டாற்றும் அறப் பண்பை வளர்க்கும்.
தேவையுணர்ந்தால் உரிமைகள் சமநிலையடையும் இல்லையானால் உணராது அறிவற்ற பண்பற்ற செயலில் ஈடுபடும் பிறர் சுதந்திரத்தை பறித்தல் பிறர் தேவையைத் தடுத்து உரிமையையும் வாழும் நிலையையும் கெடுக்கும் மிருக பதிவில் இயங்கும் மனம். அவ்வழியான பழக்கத்தை பண்பாடாக கொண்ட போர்ப்பழக்கத்தை தாண்டி வந்தும் இன்னும் இடம் பொருள் சாதி மத இன மொழிப் பற்றில் மனம் குறுகி நின்று சிந்தித்து பிறரை துன்பத்திற்குள்ளாக்கிற குறையறிவை மாற்றவே புதிய பழக்கமான மெய்யறிவு பேரறிவு பகுத்தறிவு சிந்தனை பழக்கத்தை நம் முன்னோர்கள் எடுத்துச் சொன்னார்கள் பழக்கமே புதிய பண்பாடாக மாற வேண்டும். புதிய சிந்தனைக்கு மனதை பழக்கி அறிவை அறிவோம். எவ்வகையான பாகுபாடுமின்றி அற வழியில் வாழ்வோம்
#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக