செவ்வாய், 10 மார்ச், 2015

உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன


உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன இரவு வரும் வருத்தத்தில் மரங்கள் கனத்த இதயங்களுடன் அசைவின்றி அரவமின்றி ஊர்ந்து செல்கின்றன நரக ஊர்திகள் மாடுகள் வீடு திரும்புவது மறந்து புல் மேய்கின்றன. அணில் குட்டியொன்று என் வீட்டுத் தாவரத்தில் குதித்தோடிய போது மாலைச் சூரியனின் தங்க நிறம் பூசியதாய் மின்னுகிறது. அலைப்பேசிக் கம்பத்தில் அமரச்சென்ற ஊர்க்குருவிகள் அலைப்பேசி அழைப்பின் அதிர்வுகளில் கூடு திரும்புகின்றன. தூதுவளை குத்தின் அடியில் துணையைக் காணாது கானங் கோழிகள் எட்டி எட்டி பார்க்கின்றன. ‘பேப்பர’; தின்கின்றன ஊர் காளைகள்;. வயல் வெளிகளில் ‘பி;.டி’ நெல் விதைக்கப்பட்டுள்ளதாய் சுடுகாட்டு விளம்பர பலகை போல் ஒரு விபரீதப் பலகையில் உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன அதன் விளிம்பில் தேன் சிட்டிற்கு விசம் கொடுக்கிறது ‘பிளாஸ்டிக் ரோசா’…… துவாரகா சாமிநாதன் 9629272185

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக