செவ்வாய், 10 மார்ச், 2015

நானே…..


நானே….. சிறுவயதில் ஊசித்தட்டானை ராசா தட்டானுக்கு ஊணவளித்து மகிழ்ந்ததிலுள்ள குரூரம் விளங்கியது அறுபது வயதில் இப்போது தேன் மிட்டாய்; தின்னக்கேட்கிறேன் பேத்தியிடம் அந்த வயதில் ஓணானுக்கு புகையிலை கொடுத்து அதன் போதையைக் கண்டு மகிழ்ந்தது மேலும் அதன் வாயில் மூத்திரம் பேய்ந்ததில் என்ன அரசியல் இருந்திருக்க முடியும் குழந்தைகளின் மனதில் மழை பெய்ய ஏதேனும் அரசியல் காரணம் வேண்டுமா? ஏன எதிர் வீட்டு அத்தையின் இடுப்பு ரசிக்க அடிக்கடி அவள் வீட்டுக்கு செல்வதின் அவசியம் அவளுக்கு புரியாமலில்லை. வயதொத்த வயதளித்த குரூரமும் குறும்பும் என்னுடனானதே இயல்பாய் நானே இருக்கிறேன் எல்லாவற்றிலும்….. ஆனால் என்ன என்னோடு விளையாடும் பேத்தியை மருமகள் அதட்டி உள்ளழைக்கும் போது மட்டும் மரங்கொத்தி; பிய்த்துப் போடுகிறது. துவாரகா சாமிநாதன் 9629272185

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக